கம்பத்திலிருந்து கேரளத்துக்கு கஞ்சா கடத்திய இளைஞரை, கேரள போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர்.
கம்பத்திலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளத்துக்கும் தொடர்ந்து கஞ்சா கடத்தப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக, தமிழக-கேரள எல்லையான குமுளியில், கேரள மாநில சோதனைச் சாவடியில் கஞ்சா கடத்துபவர்கள் தொடர்ந்து பிடிபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு தமிழக எல்லையிலிருந்து கேரளத்துக்குச் சென்ற இளைஞர் ஒருவரை, சந்தேகத்தின் அடிப்படையில் கேரள போலீஸார் அழைத்துள்ளனர். ஆனால், அந்த இளைஞர் கேரள பஸ் நிலையத்துக்குள் ஓடத் தொடங்கியுள்ளார்.
உடனே, கேரள போலீஸார் அந்த இளைஞரை விரட்டிப் பிடித்துள்ளனர். பின்னர், அவரிடம் நடத்திய சோதனையில், இளைஞரின் வயிற்றுப் பகுதியில் 2 கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
விசாரணையில், இவர் கம்பம் வடக்குபட்டியைச் சேர்ந்த மனோகரன் என்பவரது மகன் விஜய் (25) எனத் தெரியவந்தது. மேலும், இந்த இளைஞர் அடிக்கடி கூலிக்காக கஞ்சா கடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, விஜய் மீது வழக்குப் பதிந்து கஞ்சாவை பறிமுதல் செய்த கேரள போலீஸார், இளைஞரது செல்போனில் உள்ள எண்கள் மூலம் கேரளத்தில் இவர் யார் யாரிடம் கஞ்சா விற்று வந்தார் என்பது குறித்து விசாரித்து வருவதாகத் தெரிவித்தனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

