ஆண்டிபட்டி அருகே அரைபடிதேவன்பட்டியில் தனியார் பஸ் கவிழ்ந்த விபத்தில், அதில் பயணித்த 37 பேர் காயம் அடைந்தனர்.
செவ்வாய்க்கிழமை இரவு, மதுரையில் இருந்து தேனி நோக்கிச் சென்றது தனியார் பஸ். ஆண்டிபட்டி அருகே அரைபடிதேவன்பட்டியில் சென்று கொண்டிருந்த இந்த பஸ், திடீரென கட்டுப்பாட்டைப் இழந்து, சாலையின் அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில், பஸ்ஸில் பயணம் செய்த 2 வயது குழந்தை வைஷ்ணவி, தேனியைச் சேர்ந்த பொன்னான்டி (40), அதே ஊரைச் சேர்ந்த ரவி (45), அல்லிநகரத்தைச் சேர்ந்த சண்முகம் (55), ஓடைப்பட்டியைச் சேர்ந்த பாப்பாத்தி (40), அதே ஊரைச் சேர்ந்த பத்திரகாளி (42), வேல்ராஜ் (42), செல்வி (32) உள்ளிட்ட 37 பேர் காயம் அடைந்தனர்.
காயமடைந்தவர்களை, 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இவர்கள் அனைவரும் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது சம்பந்தமாக, க.விலக்கு போலீஸார் வழக்குப் பதிந்து, பஸ் டிரைவர் முத்துக்குமாரை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

