உத்தமபாளையம் அருகே கோகிலாபுரத்தில், வாழையில் தண்டு துளைப்பான் பாதிப்பை ஊசி மூலம் மருந்தை உட்செலுத்தி கட்டுப்படுத்தும் முறை குறித்து பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் விவசாயிகளுக்கு செயல் விளக்கப் பயிற்சி அளித்தனர்.
உத்தமபாளையம் ஒன்றியத்தில் பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய பேராசியர்கள் விஜயசாமுண்டீஸ்வரி, உஷாராணி ஆகியோர் தலைமையில் மாணவிகள் பூங்குழலி, பிரதீபா, பிரீத்தி, புஷ்பலதா, ராகப்பிரியா, ராஜகாளீஸ்வரி, ரம்யா, ரோஜா ஆகியோர் முகாமிட்டு விசாயிகளுக்கு வேளாண்மை விரிவாக்கப் பணிகள் குறித்து பயிற்சி அளித்து வருகின்றனர். கோகிலாபுரத்தில் வாழையில் தண்டு துளைப்பான் பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்கு, 150 மில்லி மோனோகுரோட்டோபாûஸ 350 மில்லி தண்ணீரில் கலந்து, ஒரு மரத்துக்கு 5 மில்லி எடுத்து, ஊசி மூலம் உட்செலுத்தி கட்டுப்படுத்தும் முறை குறித்து விசாயிகளுக்கு மாணவிகள் பயிற்சி அளித்தனர். வாழை குலைதள்ளும் பருவத்தில் ஊசி மூலம் மருந்து உட்செலுத்தும் முறையை கையாளக் கூடாது என்று விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

