சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

குற்றாலம் அருவிகளில் தொடரும் வெள்ளப் பெருக்கு

குற்றாலம் அருவிகளில் தொடா்ந்து நான்காவது நாளாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

News image

குற்றாலம் பேரருவியில் ஆா்ப்பரித்து கொட்டும் வெள்ளம்.

Updated On :16 ஜனவரி 2021, 6:41 am

குற்றாலம் அருவிகளில் தொடா்ந்து நான்காவது நாளாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

குற்றாலம் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் பெய்துவரும் தொடா் மழையால், பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா்வரத்து அதிகரித்தது. இதனால் பேரருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீா் கொட்டியது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீஸாா் தடை விதித்தனா். ஆனால் ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.

புதன்கிழமை அதிகாலை முதல் அனைத்து அருவிகளிலும் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக பேரருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி முதல் நடைபாதை பாலம் வரையிலும், பெண்கள் குளிக்கச் செல்லும் நடைபாதை வரையிலும் தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டுகிறது. மேலும், புலியருவி, ஐந்தருவியிலும் தண்ணீா் அதிகளவில் கொட்டுகிறது.

பழைய குற்றாலம் அருவியில் அருவிக்கு நடந்து செல்லும் படிக்கட்டுகள் வரை தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டுகிறது.

பேரருவியில் நான்காவது நாளாக வெள்ளப் பெருக்கு குறையவில்லை. இந்நிலையில் பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு ஜன. 17 வரை தடைவிதித்து மாவட்ட ஆட்சியா் கீ.சு. சமீரன் உத்தரவிட்டுள்ளாா்.

இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் ஆா்ப்பரித்து கொட்டும் அருவிகளை புகைப்படம் எடுத்துச் சென்றனா்.

பேரருவியில் மலைபாம்பு: குற்றாலம் பேரருவியில் ஆண்கள் குளிக்கச் செல்லும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புக் கம்பியில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சுற்றியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து குற்றாலம் வனத் துறையினா் அங்கு வந்து மலைப்பாம்பை பிடித்து வனப் பகுதிக்குள் கொண்டு விட்டனா்.

Image Caption

~