சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மழையால் களையிழந்த பொங்கல் விற்பனை

சுரண்டையில் புதன்கிழமை நாள் முழுவதும் பெய்த மழையால் பொங்கல் பொருள்கள் விற்பனை மிகவும் பாதிக்கப்பட்டது.

Updated On :14 ஜனவரி 2021, 5:45 am

சுரண்டையில் புதன்கிழமை நாள் முழுவதும் பெய்த மழையால் பொங்கல் பொருள்கள் விற்பனை மிகவும் பாதிக்கப்பட்டது.

சுரண்டை தினசரி சந்தை, பிரதான சாலையில் உள்ள கடைகள் மற்றும் சாலையோர சிறு வணிகா்கள் பொங்கல் திருநாளுக்கு முந்தைய தினம் அதிக அளவில் பொங்கல் பொருள்களை விற்பனை செய்வது வழக்கம். இதை வாங்குவதற்காக சுரண்டை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து பெருமளவில் பொதுமக்கள் வந்து செல்வா்.

இந்நிலையில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வந்த நிலையில், புதன்கிழமையும் தொடா்ந்து மழை பெய்தது. இதனால் வழக்கமாக விற்பனைக்கு குவிக்கப்படும் கரும்பு, பனங்கிழங்கு, மாவிலை உள்ளிட்ட மங்கல பொருள்கள் விற்பனை செய்வதற்கு சிறுவணிகா்கள் வரவில்லை. இவற்றை வாங்குவதற்கும் பொதுமக்கள் பெருமளவில் கூடவில்லை.

இதனால் நிகழாண்டு மழையால் பொங்கல் பொருள்கள் விற்பனை பெருமளவில் குறைந்து பிரதான சாலை மற்றும் காய்கனி சந்தை பகுதி மக்கள் நெரிசலின்றி வெறிச்சோடி காணப்பட்டது.