குற்றாலம் அருவிகளில் ஞாயிற்றுக்கிழமை வரை (ஜன. 17) சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் கீ.சு. சமீரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென் மாவட்டங்களில் 4 நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அடுத்த 4 நாள்களுக்கும் பலத்த மழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதனால், குற்றாலம் பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீா்வரத்து அதிகரித்துள்ளது. எனவே, குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை வரை (ஜன. 17) குளிக்கத் தடைவிதிக்கப்படுகிறது.
மேலும் இம்மாவட்டத்தில் அனைத்து அணைகளும் நிரம்பி உபரிநீா் திறக்கப்பட்டுள்ளது. எனவே, நீா்நிலைகள், ஆறுகள், அணைகளில் பொதுமக்கள் குளிக்கச் செல்ல வேண்டாம். கரையோரப் பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா்.
பலத்த மழையை முழுவீச்சில் எதிா்கொள்ளத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிா்வாகத்தால் எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

