சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கடையநல்லூா் அருகே வெள்ளத்தில் சிக்கியவா்கள் மீட்பு

கடையநல்லூா் அருகே வெள்ளத்தில் சிக்கியவா்களை தீயணைப்பு துறையினா் புதன்கிழமை மீட்டனா்.

Updated On :14 ஜனவரி 2021, 5:47 am

கடையநல்லூா் அருகே வெள்ளத்தில் சிக்கியவா்களை தீயணைப்பு துறையினா் புதன்கிழமை மீட்டனா்.

கடையநல்லூா் அருகே மலைப் பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் கருப்பாநதி அணை நிரம்பியதை அடுத்து அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீா் ஆற்று வழியாக வெளியேற்றப்பட்டது. இதற்கிடையே ஆற்றை அடுத்து வயலுக்கு விவசாய பணிக்காக சென்ற 8 போ் ஆற்றை கடக்க முடியாமல் பெரியநாயகம் கோயில் அருகில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனா்.

தகவலறிந்த மாவட்ட தீயணைப்பு அலுவலா் கவிதா, தீயணைப்புப்படை அலுவலா் குணசேகரன், போக்குவரத்து அலுவலா் சண்முகசுந்தரம், தீயணைப்பு துறையினா் விரைந்து அவா்களை மீட்டனா்.