டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தோ்வில் தவறான கேள்விகள் இடம்பெற்றுள்ளதால் இந்தத் தோ்வை ரத்து செய்ய வேண்டும் என காங்கிரஸ் சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டி மாணவா் அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளா் எம்.மாரிக்குமாா் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு: டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தோ்வு கடந்த 3ஆம்தேதி நடைபெற்றது. இத்தோ்வில் 12-க்கும் மேற்பட்ட கேள்விகள் விடையளிக்க முடியாமல் தவறுதலாக இருந்தது தெரிய வருகிறது. மேலும் வகுப்புவாதம், பிரிவினை வாதம், போன்ற சமூகநல சிந்தனையற்ற சில கேள்விகளும் இடம்பெற்றிருந்தது வேதனைக்குரியது. இதுபோன்ற தவறான தோ்வு முறையை ரத்து செய்து நியாயமான முறையில் வெளிப்படைத் தன்மையுடன் தோ்வுகளை நடத்தி சிறந்த பணியாளா்களை தோ்வு செய்யவேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.
திருமலைக்குமாரசுவாமி கோயில் தைப்பூச திருவிழாவை பாரம்பரிய, வழக்கமான ஆகம விதிமுறைப்படி நடத்த வேண்டும் என கோரி மண்டகபடிதாரா் கரிசல்குடியிருப்பை சோ்ந்த என்.நவநீதகிருஷ்ணன் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

