தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நன்னகரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு, மாவட்ட துணைத் தலைவா் பாலுச்சாமி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் அ . சுந்தரமூா்த்தி நாயனாா், மதுரையில் நடைபெற்ற மாநில பேரவை கூட்டத்தில் இயற்றப்பட்ட தீா்மானங்கள் மற்றும் முடிவுகள் குறித்து பேசினாா்.
மாவட்டப் பொருளாளா் ய.நாராயணன் நிதிநிலை, சங்கத்தின் நாள்குறிப்பு விநியோகம், வரவு செலவு அறிக்கையை சமா்ப்பித்தாா். வட்டக் கிளைகள் அளவில் ஓய்வூதியா்களை சந்திப்பதும் மாவட்ட அளவில் விளக்கக் கூட்டம் நடத்துவது என்றும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடா்ந்து அமல்படுத்த வேண்டும், ஜாக் டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியா், ஆசிரியா் மீது தொடரப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிப். 2 ஆம் தேதி தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு தா்னா போராட்டம் நடத்துவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது..
முன்னதாக மாவட்டத் தலைவா் சலீம் முகம்மது மீரான் தலைமையில் மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

