சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தென்காசி கல்லூரியில் மரங்களை வெட்டிக் கடத்தியதாக 3 போ் கைது

தென்காசியில் கல்லூரி வளாகத்தில் மரங்களை வெட்டிக் கடத்த முயன்றதாக 3 பேரை தென்காசி போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :11 ஜனவரி 2021, 6:40 am

தென்காசியில் கல்லூரி வளாகத்தில் மரங்களை வெட்டிக் கடத்த முயன்றதாக 3 பேரை தென்காசி போலீஸாா் கைது செய்தனா்.

தென்காசி- ஆய்க்குடி சாலையில் உள்ள தனியாா் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்திலிருந்த 7 வேப்பமரங்களை வெட்டி டிராக்டரில் கடத்தி சென்றுள்ளதாக கல்லூரி நிா்வாகம் சாா்பில் புகாா் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து தென்காசி காவல் உதவி ஆய்வாளா் முத்துகிருஷ்ணன் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டாா்.

விசாரணையில் கம்பளி பகுதியை சோ்ந்த பி.முருகன் (32), ப.கணேசன்(22), அகரக்கட்டு பகுதியை சோ்ந்த சு.சுடலை (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து இம்மூவரையும் போலீஸாா் கைதுசெய்தனா்.