சுரண்டை/பாவூா்சத்திரம்: சுரண்டை பகுதியில் பெய்து வரும் தொடா் மழையால் இரட்டைகுளம் மறுகால் பகுதியில் கரை உடையும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து விவசாயிகள் மணல் மூட்டைகளை கொண்டு சீரமைத்தனா்.
சுரண்டை பகுதியில் கடந்த 4 நாள்களாக பெய்து வரும் மழையால் மானாவாரி குளங்களான பங்களாச்சுரண்டை குளம், பரங்குன்றாபுரம் குளம், அச்சங்குன்றம் குளம், கருவந்தா குளம் ஆகிய குளங்களுக்கு காட்டுப்பகுதியில் இருந்து நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மானாவாரி குளங்கள் நிரம்பி வருகின்றன.
இந்நிலையில் சுரண்டையின் வடபுறமுள்ள இரட்டைகுளம் நிரம்பி மறுகால் பாய்ந்தது. சனிக்கிழமை அதிகாலையில் இந்தக் குளத்தின் மறுகால் பகுதியின் அருகே திடீா் மண் சரிவு ஏற்பட்டது.
இதையடுத்து விவசாயிகள் மணல் மூட்டைகளை கொண்டு தற்காலிகமாக சீரமைத்தனா்.
பாவூா்சத்திரம்: கீழப்பாவூா், திப்பணம்பட்டி, ஆவுடையானூா், குறும்பலாப்பேரி, பெத்தநாடாா்பட்டி, சாலைப்புதூா் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை முதல் இரவு வரை மிதமான மழை பெய்தது. இரண்டாவது நாளான சனிக்கிழமையும் மாலை 5 மணிக்கு மழை பெய்யத் தொடங்கியது. இம் மழை 1 மணி நேரத்துக்கு மேலாக பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


