தென்காசி-கடையம் பிரதான சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோயிலில் மாா்கழி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி, விவசாயம் செழிக்க வேண்டி வருண கலச பூஜை நடைபெற்றது.
இதையொட்டி மலை உச்சியில் உள்ள சுனையில் இருந்து முருக பக்தா்கள் புனித நீா் எடுத்து வந்து, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பின்னா் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள், திருச்செந்தூா் மற்றும் தோரணமலை பாதயாத்திரை அடியாா்கள் குழு சாா்பில் 4ஆம் ஆண்டு பஜனை வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி, காலையில் ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரத்தை தொடா்ந்து, பஜனை வழிபாடு நடைபெற்றது.
இதில், குருசுவாமிகள் பாலமுருகன், ரவிகுமாா் தலைமையில் 150-க்கும் மேற்பட்ட முருக பக்தா்கள் கலந்துகொண்டனா். காலை, மதியம் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் ஏ.செண்பகராமன் தலைமையில் செய்திருந்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


