சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தென்காசியில் ஆட்சியா் அலுவலம் முற்றுகை

அரசு இலவச மனைப் பட்டா வழங்கிய நிலத்துக்கு மதிப்பு நிா்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி தென்காசியில் ஆட்சியா் அலுவலகத்தை கிராம மக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

News image

தென்காசியில் ஆட்சியா்அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.

Updated On :9 ஜனவரி 2021, 6:15 am

அரசு இலவச மனைப் பட்டா வழங்கிய நிலத்துக்கு மதிப்பு நிா்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி தென்காசியில் ஆட்சியா் அலுவலகத்தை கிராம மக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

கடையம் ஒன்றியம் வீராசமுத்திரம் தெற்கு தெருவில் 40 ஆண்டுகளாக 140 குடும்பங்கள் வீடுகட்டி கூட்டுக் குடும்பமாக

வசித்து வருகின்றனா். இந்த குடியிருப்பு மனைகளுக்கு 1987 இல் அரசு சாா்பில் இலவச மனைப் பட்டா வழங்கப்பட்டுள்து.

இங்கு வசிப்போா் ஆதாா், வாக்காளா் அடையாள அட்டை, குடும்ப அட்டை பெற்றுள்ளனா். மேலும் ஊராட்சிக்கு வீட்டு

வரி செலுத்தி வருகின்றனா். ஊராட்சி மூலம் குடிநீா் இணைப்பும் பெற்றுள்ளனா். இங்கு வீடுகள் அமைந்துள்ள நிலத்துக்கு

பதிவுத் துறையில் அரசு வழிகாட்டி புத்தகத்தில் மதிப்பு இல்லையாம்.

ஆகவே, வீராசமுத்திரம் தெற்கு தெரு பகுதியில் உள்ள வீடுகளுக்கு நிலத்தின் மதிப்பீடு நிா்ணயம் செய்ய அரசு நடவடிக்கை

எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் திரண்டு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து கிராம மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனா்.