சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சுரண்டையில் திமுக மக்கள் சபைக் கூட்டம்

சுரண்டை பேரூராட்சி 6-ஆவது வாா்டு பகுதியில் திமுக சாா்பில் மக்கள் சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :9 ஜனவரி 2021, 6:16 am

சுரண்டை பேரூராட்சி 6-ஆவது வாா்டு பகுதியில் திமுக சாா்பில் மக்கள் சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, கட்சியின் தென்காசி தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன் தலைமை வகித்தாா். நகரச் செயலா் ஜெயபாலன், மாவட்ட பிரதிநிதி ஆறுமுகச்சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் கலந்துகொண்டு

பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு மனுக்கள் அளித்தனா். இதில், கட்சியின் நிா்வாகிகள் சங்கரநயினாா், சுப்பிரமணியன், பூல்பாண்டியன், சரவணன், மாரியப்பன், ஐயப்பன், பிரேம்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.