சுரண்டை: சுரண்டை அருகேயுள்ள திருச்சிற்றம்பலம் கிராமத்தில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் பாலம் கட்டுமான பணி திங்கள்கிழமை தொடங்கியது.
சிற்றாறு பாசனத்தின் கீழ் திருச்சிற்றம்பலம் அணைக்கட்டில் இருந்து சுரண்டை பெரியகுளத்திற்கு செல்லும் கால்வாயின் குறுக்கே பாலம் இல்லாததால் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களுக்கு செல்வதற்கு 3 கி.மீ தூரம் சுற்றிச்செல்லும் நிலை இருந்து வந்தது. இதுகுறித்து விவசாயிகளின் தொடர் கோரிக்கையை அடுத்து தென்காசி சட்டப்பேரவை உறுப்பினர் சி.செல்வமோகன்தாஸ்பாண்டியன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, பாலம் கட்டுமான பணியை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மாரியப்பன், மணிகண்டன், சண்முகவேல், அதிமுக மாவட்ட அவைத்தலைவர் சண்முகசுந்தரம், பொருளாளர் சாமிநாதன், எபன் குணசீலன், அமல்ராஜ், இருளப்பன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


