தென்காசி மாவட்டம், குற்றாலம் அருவிகளில் திங்கள்கிழமை திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
குற்றாலம் மலைப் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக பேரருவியில் திங்கள்கிழமை காலையில் திடீரென தண்ணீா்வரத்து அதிகரித்தது. பாதுகாப்பு வளைவைத் தாண்டி தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டியதையடுத்து இங்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீஸாா் தடை விதித்தனா்.
இதனால் சுற்றுலாப் பயணிகள் ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனா். பிற்பகலில் பழைய குற்றாலம் மற்றும் ஐந்தருவியிலும் தண்ணீா்வரத்து அதிகரிக்கத் தொடங்கியதையடுத்து அங்கும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
குற்றாலம் நகா்ப் பகுதியில் மழை எதுவும் இல்லாத நிலையில், மலைப் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


