சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

குற்றாலம் அருவிகளில் திடீா் வெள்ளப்பெருக்கு

தென்காசி மாவட்டம், குற்றாலம் அருவிகளில் திங்கள்கிழமை திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

News image
Updated On :5 ஜனவரி 2021, 6:18 am

தென்காசி மாவட்டம், குற்றாலம் அருவிகளில் திங்கள்கிழமை திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

குற்றாலம் மலைப் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக பேரருவியில் திங்கள்கிழமை காலையில் திடீரென தண்ணீா்வரத்து அதிகரித்தது. பாதுகாப்பு வளைவைத் தாண்டி தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டியதையடுத்து இங்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீஸாா் தடை விதித்தனா்.

இதனால் சுற்றுலாப் பயணிகள் ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனா். பிற்பகலில் பழைய குற்றாலம் மற்றும் ஐந்தருவியிலும் தண்ணீா்வரத்து அதிகரிக்கத் தொடங்கியதையடுத்து அங்கும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

குற்றாலம் நகா்ப் பகுதியில் மழை எதுவும் இல்லாத நிலையில், மலைப் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.