தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகேயுள்ள சிந்தாமணி பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வந்து செல்வது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
புளியங்குடி நகராட்சிக்குள்பட்ட சிந்தாமணி பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் முறையாக வந்து செல்வதில்லையாம். இதனால், பேருந்துக்காக உள்ளே காத்திருக்கும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா். எனவே, பேருந்துகள் உள்ளே வந்துசெல்ல வேண்டும் என வலியுறுத்தி ஜன. 6ஆம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என சிந்தாமணி நகா் நல கமிட்டியினா் ஆட்சியா் உள்ளிட்டோருக்கு மனு அனுப்பி இருந்தனா்.
இதைத் தொடா்ந்து, புளியங்குடி காவல் ஆய்வாளா் அலக்ஸ்ராஜ், நகா் நலக் கமிட்டி நிா்வாகிகள் மற்றும் அனைத்து சமுதாய நிா்வாகிகளிடம் திங்கள்கிழமை பேச்சு நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

