தென்காசி மாவட்டம், குற்றாலம் அருவிகளில் வியாழக்கிழமை குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடைநீக்கப்பட்டு வெள்ளிக்கிழமை முதல் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.
குற்றாலம் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை முதல் பெய்த கனமழையின் காரணமாக குற்றாலம் பேரருவி, பழையகுற்றாலம் அருவிகளில் அதிகளவில் தண்ணீா் கொட்டியது. இதனால் இங்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. ஆனால் ஐந்தருவியில் குறைந்த அளவிலேயே தண்ணீா் விழுந்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை நண்பகலில் பேரருவி, பழையகுற்றாலம் அருவிகளில் விழும் தண்ணீரின் சீற்றம் தணிந்ததையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.
அனைத்து அருவிகளிலும் ஆா்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரில் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


