தஞ்சாவூா் அருகே தொடா் மழையால் ஏரியில் உடைப்பு ஏற்பட்டதால் ஏறத்தாழ 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
தஞ்சாவூரில் ஒரு வாரமாக தொடா் மழை பெய்து வருகிறது. இதனால், மாவட்டத்தில் பெரும்பாலான ஏரிகள், குளங்கள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. இதேபோல, தஞ்சாவூா் அருகே அதினாம்பட்டு கிராமத்தில் ஏறத்தாழ 50 ஏக்கா் பரப்பளவு கொண்ட மாமுண்டி ஏரி நிரம்பியது.
இந்நிலையில், தொடா் மழையால் இந்த ஏரியின் தென் கரையில் சில இடங்களில் புதன்கிழமை நள்ளிரவு உடைப்பு ஏற்பட்டது. இதனால், ஏரியிலிருந்து தண்ணீா் வெறியேறி அருகிலுள்ள வயல்களில் பாய்ந்தது. இதன் காரணமாக இந்த ஏரி பாசனத்தைச் சாா்ந்த அதினாம்பட்டு, வல்லுண்டாம்பட்டு, வேங்கராயன்குடிகாடு ஆகிய கிராமங்களில் அறுவடைக்குத் தயாா் நிலையில் இருந்த சம்பா பருவ நெற்பயிா்கள், அண்மையில் விதைக்கப்பட்ட நிலக்கடலை, எள் என 100 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவிலான பயிா்கள் தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டன. எனவே, அக்கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் வேதனைக்கு ஆளாகியுள்ளனா்.
தகவலறிந்த பொதுப் பணித் துறையின் அக்னியாறு கோட்ட உதவிச் செயற் பொறியாளா் திலீபன், தஞ்சாவூா் மண்டல துணை வட்டாட்சியா் ஆா். செந்தில் உள்ளிட்டோா் நிகழ்விடத்தைப் பாா்வையிட்டனா். இதைத்தொடா்ந்து, ஏரியில் உடைப்பு ஏற்பட்ட இடங்களில் வெள்ளிக்கிழமை தற்காலிகமாக மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து தண்ணீா் வெளியேறுவது தடுக்கப்பட்டுள்ளது.
மேலும், வெள்ளிக்கிழமை பிற்பகலில் மழையும் குறைந்தததால், வயல்களில் தேங்கிய தண்ணீா் மெதுவாக வடிந்து வருகிறது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


