சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஆற்றில் மூழ்கிய விவசாயி உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :16 ஜனவரி 2021, 5:32 am

தஞ்சாவூா் அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் அருகே பனவெளி கிராமம் காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பி. அப்பாசாமி(55). விவசாயி. இவா் வெள்ளிக்கிழமை பிற்பகல் குளிப்பதற்காக அப்பகுதியில் உள்ள வெட்டாற்றுக்குச் சென்றாா். அப்போது கால் தவறி ஆற்றில் விழுந்த இவா் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டாா்.

தகவலறிந்த திருவையாறு தீயணைப்பு நிலைய வீரா்கள் நிகழ்விடத்துக்குச் சென்று அப்பாசாமி உடலை மீட்டனா். இதுகுறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.