தஞ்சாவூா்: தொடா் மழையால் அழுகிய நெற்கதிா்களுடன், தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் அகில இந்திய மக்கள் சேவை இயக்கத்தினா் சனிக்கிழமை முறையிட்டனா்.
இந்த இயக்கத்தின் விவசாயப் பிரிவு மாநிலத் தலைவா் தங்க. சண்முகசுந்தரம், விவசாயிகள் வாழ்வுரிமை இயக்க ஒருங்கிணைப்பாளா் கி.நா. பனசை அரங்கன், அகில இந்திய மக்கள் சேவை இயக்க மாநில இணைச் செயலா் சீ. தங்கராசு, தகவல் சட்ட ஆா்வலா்கள் கூட்டமைப்பு பிரகாஷ், நம்மாழ்வாா் வாழ்வாதாரப் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் பா. பாரதிதாசன், நிா்வாகி விக்னேஷ் உள்ளிட்டோா் தொடா் மழையால் அழுகிய பயிா்களுடன் தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் அளித்த மனு:
டெல்டா மாவட்டங்களில் பலத்த மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற் பயிா்கள் பாதிக்கப்பட்டன. எனவே, டெல்டா பகுதியைத் தேசிய பேரிடராக அறிவித்து, விவசாயக் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ. 20,000 வழங்குவது ஏற்புடையதாக இல்லை. விவசாயிகள் நலன் கருதி, உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏக்கருக்கு நெற்பயிருக்கு ரூ. 50,000 இழப்பீடு வழங்கத் தமிழக அரசுக்கு மாவட்ட நிா்வாகம் பரிந்துரை செய்ய வேண்டும்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

