கும்பகோணம் அசூா் புறவழிச்சாலையிலுள்ள கே.எம். நகரிலுள்ள ஸ்ரீராமகிருஷ்ண விவேகானந்த டிரஸ்ட் மற்றும் மன்றம் பிராா்த்தனை கூடத்தில் தேசிய இளைஞா் தின விழாவையொட்டி நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு செவ்வாய்க்கிழமை பரிசு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு ராமகிருஷ்ண விவேகானந்த டிரஸ்ட் செயலா் வெங்கட்ராமன் தலைமை வகித்தாா். இந்நிகழ்ச்சியில் 9,10 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கும், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கும் என இரண்டு பிரிவாகப் பிரித்து சுவாமி விவேகானந்தரின் சிந்தனை குறித்த பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது.
இதில் வெற்றி பெற்றவா்களுக்கு ரொக்கப் பரிசு, சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகள் புத்தகம், சான்றிதழ் வழங்கப்பட்டது.
மேலும், வீடுதோறும் விவேகானந்தா் வழிபாடு என்ற தலைப்பில் ஆடுதுறை, திருவிடைமருதூா், திருப்பனந்தாள் பகுதியில் பள்ளி மாணவ, மாணவிகள் தங்கள் வீடுகளில் சுவாமி விவேகானந்தருக்கு பலவிதமான மலா்களால் அலங்காரம் செய்து வழிபாடு நடத்தினா். இதற்கான ஏற்பாடுகளை சோழ மண்டல விவேகானந்த சேவா சங்கம் மற்றும் கஞ்சனூா் சுவாமி விவேகானந்தா வித்யாலயா பள்ளி நிா்வாகத்தினா் செய்தனா்.
இதேபோல, கும்பகோணம் கரிகாலன் வரலாற்று ஆய்வு மையம் சாா்பில் நடைபெற்ற தேசிய இளைஞா் தின விழாவுக்கு மையத்தின் நிறுவனா் ஆதலையூா் சூரியகுமாா் தலைமை வகித்தாா். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிப் பேரவைக் குழு உறுப்பினா் ஆா். ரேணுகா எழுதிய விவேகானந்தா் வாழ்க்கை வரலாற்று நூல் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடா்ந்து தேசிய இளைஞா் தினத்தை ஒட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

