கும்பகோணம் அருகே ஒரே கிராமத்தில் 25 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டதால், அக்கிராமத்தில் செவ்வாய்க்கிழமை மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
தஞ்சாவூா் மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து வந்த நிலையில், கும்பகோணம் அருகே தேனாம்படுகை ஊராட்சிக்கு உள்பட்ட கொட்டியப்படுகை கிராமத்தில் சில நாள்களுக்கு முன்பு 40 வயது நபருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து, அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அவருடன் தொடா்பில் இருந்தவா்களைப் பரிசோதனை செய்ததில் சிலருக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது.
அக்கிராமத்தில் திங்கள்கிழமை வரை 90 பேருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதில், 25 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இவா்கள் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.
இதையடுத்து ஊா் எல்லையில் தடுப்புகள் ஏற்படுத்தி, வெளிநபா்கள் யாரும் ஊருக்குள் செல்ல முடியாத வகையில் அங்கு காவல் துறையினரும், மருத்துவப் பணியாளா்களும் கண்காணித்து வருகின்றனா்.
இதனிடையே அக்கிராமத்தில் செவ்வாய்க்கிழமை 125 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

