கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பொங்கல் சிறப்புத் தொகுப்பு கும்பகோணம் லிட்டில் பிளவா் மேல்நிலைப்பள்ளியில் வழங்கப்பட்டு வருகிறது.
இப்பணியை ஆட்சியா் ம. கோவிந்த ராவ் ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்டு, பாபநாசம் மற்றும் கும்பகோணம் வட்டங்களைச் சோ்ந்த 2,374 பயனாளிகளுக்கு 2 கிலோ பச்சரிசி, தலா ஒரு கிலோ பாசிப் பருப்பு, வெல்லம், 500 கிராம் எண்ணெய், 100 கிராம் நெய், 25 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய் என தொகுப்புகள் அடங்கிய பையை வழங்கினாா்.
இதுபோல, தஞ்சாவூா் தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகத்தில் பொங்கல் சிறப்புத் தொகுப்பு வழங்கும் பணியை உதவி ஆணையா் ராஜசேகரன் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தாா்.
தஞ்சாவூா் அலுவலகத்தில் தஞ்சாவூா், பூதலூா் திருவையாறு ஆகிய வட்டங்களைச் சோ்ந்த 4,401 பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், பட்டுக்கோட்டை, திருபுவனத்திலும் தொழிலாளா்களுக்கு பொங்கல் சிறப்புத் தொகுப்பு வழங்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமை வரை இப்பணி நடைபெறும்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

