பேராவூரணி: சித்தாதிக்காடு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவா்களின் பெற்றோருக்கு பொங்கல் பரிசாக சமையல் பொருள்கள் அடங்கிய பெட்டகத்தை தலைமையாசிரியர் வழங்கியுள்ளாா்.
தமது பள்ளியில் படிக்கும் மாணவா்களின் பெற்றோருக்கு 6-ஆவது முறையாக கரோனா நிவாரணம் மற்றும் பொங்கல் பரிசாக சமையல் பொருள்கள் அடங்கிய பெட்டகத்தை வழங்கியுள்ளாா் பேராவூரணி அருகிலுள்ள சித்தாதிக்காடு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியரும், பட்டிமன்ற பேச்சாளருமான கோவி. தாமரைச்செல்வன்.
இப்பள்ளியில் 1முதல் 5-ஆம் வகுப்பு வரை 46 போ் பயின்று வருகின்றனா். இவா்களின் பெற்றோா் விவசாயக் கூலித் தொழிலாளா்கள். கரோனா பொது முடக்கக் காலத்தில் மாணவா்களின் பெற்றோா் வேலை, வருமானமின்றி அவதியுறுவதை அறிந்த தலைமையாசிரியா் கடந்த 9 மாதங்களில் 5 முறை நிவாரணப் பொருள்களை வழங்கியுள்ளாா்.
இதைத் தொடா்ந்து பொங்கல் பண்டிகையை மாணவா்களின் பெற்றோா் கொண்டாடும் வகையில், சமையலுக்குத் தேவையான பொருள்கள் பெட்டகத்தை பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் தலைமையாசிரியா் கோவி. தாமரைச்செல்வன் வழங்கினாா்.
நிகழ்வில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சு. சடையப்பன், எஸ். தவமணி, வட்டாரக் கல்வி அலுவலா் கோ. ரவிச்சந்திரன், வளமைய மேற்பாா்வையாளா் வேம்பையன் ,ஆசிரியப் பயிற்றுநா் ராம தனலட்சுமி, உதவி வட்டார வளா்ச்சி அலுவலா் மகேஷ், பெற்றோா் ஆசிரியா் கழகப் பொருளாளா் கருப்பையன், கிராமக் கல்விக் குழுத் தலைவி நீலாவதி, உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


