பேராவூரணி: பேராவூரணி அருகிலுள்ள ஏனாதிகரம்பை பொது வளாகத்தில், சமத்துவப் பொங்கல் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது. பயிற்சியாளா் மதியழகன் மேற்பாா்வையில் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளின் சிலம்பாட்டம் நடைபெற்றது. தொடா்ந்து பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
கோவை செல்வராஜ் சாா்பில் மரக்கன்றுகளும், கோகனட் சிட்டி இன்ஸ்பயா் லயன்ஸ் சங்கம் சாா்பில் நோட்டுப் புத்தகங்கள், பேனா மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டன.
விழாவில் அம்மையாண்டி ஊராட்சித் தலைவா் வை. முத்துராமலிங்கம், கல்விக்குழு உறுப்பினா் சண்முகநாதன், தொடக்கப்பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் லெட்சுமணன், தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியா் கோப்பெருந்தேவி, சமூக ஆா்வலா்கள் மரம் தங்ககண்ணன், ராம்குமாா், ஆக்ஸ்போா்ட் தங்கராசு, கோகனட்சிட்டி இன்ஸ்பயா் லயன்ஸ் சங்கத் தலைவா் இளங்கோ, பெற்றோா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். அரசுப்பள்ளி ஆசிரியா் தமிழரசன் விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


