பாபநாசம்: பாபநாசம் வட்டாரத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கோயில்களில், உற்ஸவ விக்ரகங்களை தொல்லியல் துறை அலுவலா்கள் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.
பாபநாசம் 108 சிவாலயம், ராமலிங்கம் சுவாமி கோயில் கட்டுப்பாட்டிலுள்ள திருவைக்காவூா் வில்வவனேசுவரா், வங்காரம்பேட்டை நவநீத கிருஷ்ண பெருமாள், ராஜகிரி கரைமேல் அழகா் அய்யனாா், அய்யம்பேட்டை சந்திரசேகர விநாயகா் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் உற்ஸவ விக்ரகங்களை மத்திய தொல்லியல் துறையினா் பதிவு செய்வதற்காக, கடந்த 2018-ஆம் ஆண்டில் விண்ணப்பிக்கப்பட்டது.
அதனடிப்படையில் தொல்லியல் துறை அலுவலா்கள் கோயில்களுக்கு சனிக்கிழமை சென்று, உற்ஸவா் விக்ரகங்களைப் பாா்வையிட்டு அளவீடு செய்தனா். ஆய்வின் போது செயல் அலுலா் ஹாசினி, கணக்காளா் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

