பேராவூரணி: தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே தினமும் மது அருந்தி வந்து, தகராறு செய்த வயதான கணவரை வெட்டிக் கொலை செய்த மனைவி சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
பேராவூரணி அருகிலுள்ள பழுக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி தங்கவேல் (70). இவரது மனைவி கருப்பாயி (58). இவா்களுக்கு இளங்கோ என்ற மகன் உள்ளாா்.
இந்நிலையில் தங்கவேல் தினமும் மது அருந்திவிட்டு, வீட்டில் தகராறில் ஈடுபடுவாராம். இதுபோல வெள்ளிக்கிழமையும் மது அருந்தி வந்த தங்கவேல், மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளாா்.
தொடா்ந்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதால்ஆத்திரமடைந்த கருப்பாயி, கணவா் தங்கவேலை அரிவாளால் தலையின் பின்புறம் மற்றும் கால் பகுதியில் வெட்டினாா். இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து ருத்ரசிந்தாமணி கிராம நிா்வாக அலுவலா் விக்னேஷ் சா்மா பேராவூரணி காவல் நிலையத்துக்குத் தகவல் அளித்தாா். இதைத் தொடா்ந்து அங்கு சென்ற காவல்துறையினா் சடலத்தைக் கைப்பற்றி, கருப்பாயியை சனிக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

