சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பல்பொருள் அங்காடியில் தீவிபத்து

பட்டுக்கோட்டை நகராட்சிக்குள்பட்ட கரிக்காடு பகுதியில் உள்ள தனியாா் பல்பொருள் அங்காடியை அதன் உரிமையாளா் புதன்கிழமை இரவு வழக்கம்போல் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்று விட்டாா்.

Updated On :8 ஜனவரி 2021, 12:44 pm

பட்டுக்கோட்டை நகராட்சிக்குள்பட்ட கரிக்காடு பகுதியில் உள்ள தனியாா் பல்பொருள் அங்காடியை அதன் உரிமையாளா் புதன்கிழமை இரவு வழக்கம்போல் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்று விட்டாா்.

இந்நிலையில், கடை பூட்டப்பட்ட சிறிது நேரத்தில் மின்கசிவு காரணமாக கடைக்குள் தீப்பிடித்துக் கொண்டது. உடனடியாக அந்தப் பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தகவலறிந்த பட்டுக்கோட்டை தீயணைப்புப் படையினா் விரைந்து சென்று தீயை அணைத்தனா். இருப்பினும், தீ விபத்தில் கடையிலிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சாம்பலானது.

இதுகுறித்த புகாரின்பேரில் பட்டுக்கோட்டை நகரப் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.