வேளாண்மை, மின்சார, தொழிலாளா் விரோத சட்டங்களை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி தஞ்சாவூா், கும்பகோணத்தில் சிஐடியு அமைப்பினா் புதன்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்தினா்.
மத்திய அரசுக் கொண்டு வந்துள்ள விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும். மின்சாரச் சட்டத் திருத்தத்தைக் கைவிட வேண்டும். தொழிலாளா் நலச் சட்டங்களை காா்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக மாற்றி அமைத்ததை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு சாா்பில் தேசம் தழுவிய மறியல் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இதன் ஒருபகுதியாக, தஞ்சாவூா் காந்திஜி சாலை ஆற்றுப்பாலம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு சிஐடியு மாவட்டச் செயலா் சி. ஜெயபால் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் து. கோவிந்தராஜூ, மாநிலக்குழு உறுப்பினா் பி.எம். போ்நீதி ஆழ்வாா், மாவட்ட துணைச் செயலா் கே. அன்பு, மின் ஊழியா் மத்திய அமைப்பு மாநிலத் துணைத் தலைவா் எஸ். இராஜாராமன், விரைவுப் போக்குவரத்து சங்கம் எஸ். செங்குட்டுவன் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா். இதுதொடா்பாக 20 பெண்கள் உள்பட 100 போ் கைது செய்யப்பட்டனா்.
இதேபோல, கும்பகோணத்தில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் 35 போ் கைது செய்யப்பட்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


