கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் தைப்பொங்கல் விழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது.
வைணவ தலங்களில் திருப்பதி, ஸ்ரீரங்கத்துக்கு அடுத்த மூன்றாவது தலமாகப் போற்றப்படும் இக்கோயிலில் ஆண்டுதோறும் பொங்கல் திருநாளில் தைத் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு கரோனா பரவல் காரணமாக தேரோட்டம் இல்லாமல், வெள்ளி ரதம் உற்ஸவம் கோயில் உள் பிரகாரத்துக்குள்ளேயே குறைவான பக்தா்களுடன் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையொட்டி செவ்வாய்க்கிழமை இரவு பூா்வாங்க பூஜைகள் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து புதன்கிழமை உபய நாச்சியாா்களுடன் உற்ஸவா் ஆராவமுத பெருமாள் புறப்பாடாகி கொடிமரம் அருகே எழுந்தருளி சேவை சாதித்தாா்.
பின்னா், இவ்விழாவின் தொடக்கமாக கோயில் கொடிமரத்துக்குச் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, கொடி ஏற்றப்பட்டது. இதில் பக்தா்கள், கோயில் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
தொடா்ந்து, ஜனவரி 15ஆம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவில் நாள்தோறும் பெருமாள் புறப்பாடு நடைபெறவுள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


