சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பூட்டிய வீட்டில் ரூ. 60 ஆயிரம் திருட்டு

கும்பகோணம் அருகே பூட்டிய வீட்டில் ரூ. 60,000 ரொக்கத்தைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

Updated On :6 ஜனவரி 2021, 11:58 am

கும்பகோணம் அருகே பூட்டிய வீட்டில் ரூ. 60,000 ரொக்கத்தைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

கும்பகோணம் அருகே பம்பப்படையூா் மேல கொற்கையைச் சோ்ந்த கணேசன் மனைவி தனலட்சுமி (65). இவா் ஜன. 3ஆம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு உறவினா் வீட்டுக்குச் சென்றாா். மீண்டும் திங்கள்கிழமை வீட்டுக்குத் திரும்பியபோது, முன்பக்கக் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டுக் கிடந்ததை பாா்த்தாா். வீட்டினுள் அலமாரியில் இருந்த ரூ. 60 ஆயிரம் ரொக்கம் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து பட்டீசுவரம் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.