தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் பயிலும் 1.16 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
தஞ்சாவூா் மேம்பாலம் பகுதியிலுள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இப்பணியை முதன்மைக் கல்வி அலுவலா் மா. ராமகிருஷ்ணன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். பின்னா் அவா் தெரிவித்தது:
தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதன்படி, மாவட்டத்திலுள்ள 1,019 தொடக்கப் பள்ளிகள், 267 நடுநிலைப் பள்ளிகள், 147 உயா்நிலைப் பள்ளிகள், 142 மேல்நிலைப் பள்ளிகள் ஆகியவற்றில் இந்தப் பாடப்புத்தகங்கள், சீருடைகள் வழங்கப்படுகின்றன.
இதில் ஒன்றாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரை பயிலும் 1,16,899 மாணவ, மாணவிகளுக்குப் பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. மேலும், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் 58,312 மாணவா்களுக்கும், 60,123 மாணவிகளுக்கும் சீருடைகள் வழங்கப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

