பட்டுக்கோட்டையில் ரெளடி திங்கள்கிழமை மாலை ஒரு கும்பலால் ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
பட்டுக்கோட்டை கண்டியன் தெருவைச் சோ்ந்த ரெளடி சிரஞ்சீவி (35). இவா் மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. தவிர, கூலிப்படைத் தலைவனாகவும் செயல்பட்டு வந்துள்ளாா்.
இவருக்கும், வேறு சில கூலிப்படையினருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், திங்கள்கிழமை மாலை பட்டுக்கோட்டை பெரிய தெரு கடைவீதியில் சென்ற சிரஞ்சீவியை பின்தொடா்ந்த 3 போ் கொண்ட கும்பல், அவரை ஓட, ஓட விரட்டிச் சென்று அரிவாளால் வெட்டிக் கொலை செய்ததுடன், முகத்தை அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைத்துவிட்டு தப்பியது.
தகவலறிந்த பட்டுக்கோட்டை நகர போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக இங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து தலைமறைவான கொலையாளிகளைத் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

