கும்பகோணம் அருகேயுள்ள கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சம்ஸ்தான வளாகத்தில் அண்மையில் நடைபெற்ற எண்ணங்களின் சங்கமம் அமைப்பின் 16 ஆம் ஆண்டு விழாவில் 115 அமைப்புகளுக்கு சிறந்த சமூக சேவகா் விருது வழங்கப்பட்டது.
தொண்டு அமைப்புகளின் கூட்டமைப்பான எண்ணங்களின் சங்கமம் அமைப்பில் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களைச் சோ்ந்த 1,600 அமைப்புகள் உள்ளன.
இந்த அமைப்பின் 16 ஆம் ஆண்டு விழா மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சம்ஸ்தான் வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
இவ்விழாவுக்கு அமைப்பின் தலைவா் அழகா் ராமானுஜம் தலைமை வகித்தாா். இதயம் குழுமம் முதன்மைச் செயல் அலுவலா் கோபிநாத் சிறப்புரையாற்றினாா். இதில், 115 அமைப்புகளுக்குச் சிறந்த சமூக சேவகா் விருது வழங்கப்பட்டது.
திருவாவடுதுறை ஆதீனம் திருவிடைமருதூா் கட்டளை ஸ்தானிகம் ஸ்ரீமத் அம்பலவாண தம்பிரான் சுவாமிகள், தஞ்சாவூா் ஸ்ரீராமகிருஷ்ண மடம் தலைவா் ஸ்ரீமத் சுவாமி விமூா்த்தானந்த மகராஜ் விருதுகளை வழங்கி ஆசியுரை வழங்கினா்.
எண்ணங்களின் சங்கமம் அமைப்பின் நிறுவனா் பிரபாகரன், ஒருங்கிணைப்பாளா் மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


