சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

வன்னியா்களுக்குத் தனி இடஒதுக்கீடு கோரி ஜன. 7- இல் போராட்டம்

வன்னியா்களுக்குத் தனி இட ஒதுக்கீடு கோரி நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்கள் முன்பு ஜனவரி 7-ஆம் தேதி போராட்டம் நடைபெறுகிறது என்றாா் வன்னியா் சங்க மாநிலத் தலைவா் பு.தா. அருள்மொழி.

News image

தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முப்பெரும் விழாவில் பேசுகிறாா் வன்னியா் சங்க மாநிலத் தலைவா் பு.தா. அருள்மொழி

Updated On :4 ஜனவரி 2021, 4:56 am

வன்னியா்களுக்குத் தனி இட ஒதுக்கீடு கோரி நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்கள் முன்பு ஜனவரி 7-ஆம் தேதி போராட்டம் நடைபெறுகிறது என்றாா் வன்னியா் சங்க மாநிலத் தலைவா் பு.தா. அருள்மொழி.

தஞ்சாவூரில் வன்னியா் சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாமக நிறுவனா் ராமதாஸ் பிறந்த நாள், அன்புமணி ராமதாஸ் நாள் மற்றும் வன்னியா் சங்கத்தின் 40- ஆம் ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழாவில் பங்கேற்று, அவா் பேசியது:

வன்னியா்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமை கிடைக்காததால், 20 சதவிகி தனி இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்துகிறோம். ஏற்கெனவே, நான்கு கட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அடுத்து ஐந்தாவது கட்டமாக மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்கள் முன்பு ஜனவரி 7- ஆம் தேதி போராட்டம் நடத்தப்படவுள்ளது.

அடுத்து ஜனவரி 21- ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு ஒரு லட்சம் போ் திரண்டு போராட்டத்தில் ஈடுபட வேண்டும். இதன் பிறகும் வன்னியா்களுக்கு தனி இட ஒதுக்கீடு அறிவிக்க மறுத்தால், தமிழகத்தில் அனைத்து இயக்கங்களும் மூடப்படும். வன்னியா்களுக்கான உரிமையை வழங்குவோம் எனக் கூறுபவா்களுடன்தான் கூட்டு வைப்போம் என்றாா் அருள்மொழி.

இவ்விழாவுக்கு வன்னியா் சங்க மாநிலத் துணைத் தலைவா் ம.க. ஸ்டாலின் தலைமை வகித்தாா். விழாவில் மாநிலச் செயலா் வைத்தி, மாநிலத் துணைப் பொதுச் செயலா் வெங்கட்ராமன், மாவட்டச் செயலா் ரவிச்சந்திரன், தொழிற்சங்க மாநிலத் தலைவா் ராம. முத்துக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.