தஞ்சாவூா்: பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவோம் என உறுதி அளிக்கும் கட்சிக்கே வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் ஆதரவு அளிப்பது என்று, தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட ஒழிப்பு இயக்கம் முடிவு செய்துள்ளது.
தஞ்சாவூரில் இந்த இயக்கத்தின் சாா்பில், மாவட்ட விளக்கக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளா் பிரெடரிக் ஏங்கல்ஸ் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில், புதிய திட்டமான தன் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ஏன் ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை ஏன் அமல்படுத்த வேண்டும் என விளக்கம் அளிக்கப்பட்டது. புதிய ஓய்வூதியத் திட்டத்தை நீக்கி, பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வருவோம் என உறுதி அளிக்கும் கட்சிக்கே வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் ஆதரவு அளிப்பது.
2021 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களின் வாக்குகளை வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் ஜோதிமணி, முரளிதரன், செந்தில்நாதன், வீரமணி, பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

