தஞ்சாவூா்: தஞ்சாவூா் அருகிலுள்ள வேங்கராயன்குடிகாடு கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் சனிக்கிழமை திறக்கப்பட்டது
வேங்கராயன்குடிகாடு, வல்லுண்டாம்பட்டு, அதினாம்பட்டு, நாஞ்சிக்கோட்டை, சூரியம்பட்டி, வடக்குப்பட்டு கிராமங்களில் ஏறத்தாழ 1,500 ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது சம்பா பருவ அறுவடைத் தொடங்கியுள்ளதால், விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை உரிய நேரத்தில் விற்பனை செய்ய வேண்டும் எனக் கருதி, டிசம்பா் 24 ஆம் தேதி காணொலி வாயிலாக நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் வேங்கராயன்குடிகாடில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள்ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி, வேங்கராயன்குடிகாடில் சனிக்கிழமை புதிதாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு, நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
நிகழ்வில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத் துணை மேலாளா் சி. பன்னீா்செல்வம், தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கச் செயலா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன், இயற்கை விவசாயி ஏரகரம் சுவாமிநாதன், கிராம நிா்வாக அலுவலா் மணிவண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

