வெங்காய விலையேற்றத்துக்கு வியாபாரிகள் காரணம் இல்லை என்றார் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா.
இதுகுறித்து தஞ்சாவூரில் புதன்கிழமை மாலை அவர் அளித்த பேட்டி:
சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கக் கூடாது. உணவுப் பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வணிகர்களைத் திரட்டி சென்னையில் ஆளுநர் மாளிகை நோக்கி நவ. 19-ம் தேதி பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகும் நடவடிக்கை எடுக்காவிட்டால் அது நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும்.
நகைக் கடை, செல்போன் கடை, மொத்த வியாபாரக் கடை உள்ளிட்டவற்றில் அடிக்கடி கொள்ளைச் சம்பவங்கள் நிகழ்கின்றன. இதுதொடர்பாக காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெங்காய விலையேற்றத்துக்கு வியாபாரிகள் காரணம் அல்ல. இதற்கு விளைச்சல் குறைவாக உள்ளதே காரணம் என்றார் விக்கிரமராஜா.
பின்னர், நடைபெற்ற பேரமைப்பின் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டத்தில் மாநிலப் பொதுச் செயலர் கே. மோகன், மண்டலத் தலைவர் எல். செந்தில்நாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், மாநிலத் துணைத் தலைவராக கே. சுப்பிரமணியன், இணைச் செயலராக எஸ். சேகர், மாவட்டத் தலைவராக எஸ்.எஸ். பாண்டியன், செயலராக எம். பக்கிரிசாமி, பொருளாளராக ஆர். பாஸ்கரன், நகரச் செயலராக ஏ.வி.எம். ஆனந்த் உள்ளிட்டோர் புதிய நிர்வாகிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

