சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

வடக்கு வாசலில் வழிந்தோடும் சாக்கடை

தஞ்சாவூர் வடக்கு வாசலில் உள்ள சாக்கடையில் புதன்கிழமை ஏற்பட்ட அடைப்பு காரணமாக கழிவு நீர் சாலையில் வழிந்து ஓடுகிறது.

Updated On :22 ஆகஸ்ட் 2013, 6:27 pm

தஞ்சாவூர் வடக்கு வாசலில் உள்ள சாக்கடையில் புதன்கிழமை ஏற்பட்ட அடைப்பு காரணமாக கழிவு நீர் சாலையில் வழிந்து ஓடுகிறது.

இந்தச் சாக்கடை மீது அமைக்கப்பட்டுள்ள சிறு பாலத்தில் புதன்கிழமை காலை அடைப்பு ஏற்பட்டது.

 இதனால், கழிவு நீர் சாலையில் வழிந்தோடுவதால், அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

தகவலறிந்த நகர் மன்றத் தலைவர் சாவித்திரி கோபால் உள்ளிட்டோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர்.

பின்னர், நகர் மன்றத் தலைவர் தெரிவித்தது:

வடக்கு வாசலில் சாலை உயர்த்தப்பட்டதால் சிறுபாலம் கீழே போய்விட்டது. இதனால், கழிவு நீர் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது. இதை உடனடியாகச் சீரமைத்து புதிதாக சிறுபாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.