தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆக. 23-ம் தேதிக்குப் பிறகு மத்திய கால விதைநெல் ரகங்களைப் பயன்படுத்தி பயிரிடுமாறு வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து வேளாண் துறை இணை இயக்குநர் ஜெ. சேகர் தெரிவித்தது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் நிகழ் சம்பா பருவத்தில் 1.17 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சம்பா பருவத்துக்குத் தேவையான நீண்டகால ரகமான சாவித்திரி விதைகள் (சி.ஆர். 1009) வேளாண் விரிவாக்க மையங்களிலிருந்து 415 மெட்ரிக் டன்களும், தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 750 மெட்ரிக் டன்களும் இதுவரை விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
மேலும், மத்திய கால ரகமான பி.பி.டி. 5204 தனியார், கூட்டுறவு சங்கங்களில் 505 மெட்ரிக் டன்களும், ஆடுதுறை 46 வேளாண் விரிவாக்க மையங்களில் 110 மெட்ரிக் டன்களும் இருப்பு வைக்கப்பட்டு, விநியோகம் செய்யப்படுகின்றன.
ஆக. 23-க்குப் பிறகு நீண்டகால ரகங்களை நாற்று விட்டு பயிரிட்டால் வடகிழக்கு பருவ மழை தீவிரமடையும் நேரத்தில் நவம்பர் மாதத்தில் நெல் பயிர் பூக்கும் பருவத்தை அடையும்போது பூக்கள் உதிர்ந்து மகசூல் பாதிக்கப்படும். எனவே, விவசாயிகள் நீண்டகால ரகங்களைத் தவிர்த்து, மத்திய கால ரகங்களான ஆடுதுறை 46, பி.பி.டி. 5204, ஆடுதுறை 38, ஆடுதுறை 39 ஆகிய ரகங்களைப் பயிரிட்டு பயனடையலாம். மத்திய கால விதை நெல் ரகங்கள் 1,350 மெட்ரிக் டன்கள் வேளாண் விரிவாக்க மையங்கள், தனியார், கூட்டுறவு சங்கங்களில் இருப்பில் உள்ளன.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

