பேராவூரணி பகுதிகளில் சாலைப் பணிகளை முடிக்க வேண்டுமென ஒன்றியக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஒன்றியக் குழுவின் சாதாரணக் கூட்டம் ஒன்றியக் குழுத் தலைவர் சாந்திஅசோக்குமார் தலைமையில், ஒன்றிய ஆணையர்கள் சு. ராஜசேகர், வி. அரசுமணி முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:
சரோஜா (உறுப்பினர்): என் வார்டுக்குட்பட்ட பகுதிகளில் சாலைப் பணிகள் பல மாதங்களாக முடிக்கப்படாமல் உள்ளன. ஒரு வேலையை செய்து முடிக்க எவ்வளவு காலம் எடுத்துக் கொள்ளலாம்?
ராஜசேகர் (ஆணையர்): சாலைப் பணியாக இருந்தால் 60 நாட்களும், கட்டடப் பணியாக இருந்தால் 90 நாட்களிலும் முடிக்க வேண்டும்.
சரோஜா: டெண்டர் எடுக்கப்பட்டு 20 மாதங்களுக்கு மேலாகியும் வேலை நடைபெறவில்லை. ஒப்பந்தத்தை ரத்து செய்து வேறு ஒப்பந்தக்காரரிடம் கொடுத்து வேலையை முடிக்க வேண்டும்.
ஆணையர்: முறைப்படி அறிவிப்பு கொடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கருணாநிதி (உறுப்பினர்): சித்தாதிக்காடு இணைப்புச் சாலை எந்த நிலையில் உள்ளது.
ஆணையர்: மதிப்பீட்டுத் தொகை அதிகம் என்பதால் அரசிடம் அனுமதி பெற்று டெண்டர் விடப்பட்டபின் சாலைப்பணி நடைபெறும்.
கருணாநிதி: திருமண உதவித்தொகை பெற திருமணத்திற்கு முன்பே முறைப்படி விண்ணப்பித்தும், நீண்ட நாள்களாக உதவித்தொகை வழங்கப்படாமல் இருப்பது ஏன்?
சாந்திஅசோக்குமார் (தலைவர்): முறையாக விண்ணப்பித்தோருக்கு முன்னுரிமை அடிப்படையில் உதவித்தொகை கிடைக்கும்.
ராமமூர்த்தி (உறுப்பினர்): செருவாவிடுதி பாலம் கட்ட இடத்தைப் பார்வையிட்ட பிறகு எந்த வேலையும் நடைபெறவில்லை. பாலம் கட்டும் பணி என்னவாயிற்று?
ஆணையர்: அப்பகுதியில் 3 பாலங்கள் கட்டப்பட வேண்டும். அதற்கான அனுமதி மாவட்ட ஆட்சியரிடம் பெறப்பட்டு, டெண்டர் விட்டு வேலை தொடங்கப்படும்.
கருணாநிதி: இந்த மன்றத்தில் கடந்தாண்டிலிருந்து நான் வைத்த கோரிக்கைகளில் உள்ளிக்குளம் துர்வாரப்படவில்லை, மாயம்பெருமாள் கோவில் சாலை மராமத்து பணி நடைபெறவில்லை. எந்தப் பணியும் நடைபெறாமல் டீசல் போட்ட கணக்கு மட்டும் வைக்கப்படுகிறது என்றார்.
கூட்டத்தில் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. மாவட்டக் கவுன்சிலர் குழ. செ. அருள்நம்பி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் எஸ்.எஸ். நீலகண்டன், ப. ஜெய்சங்கர், முத்துராமலிங்கம், ப. ராஜகுமாரி, வளர்மதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

