சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பேராவூரணி கல்லூரியில் கருத்தரங்கம்

பேராவூரணி ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை அறிவியல் கல்லூரியில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பெரியார் உயராய்வு

Updated On :22 ஆகஸ்ட் 2013, 6:08 pm

பேராவூரணி ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை அறிவியல் கல்லூரியில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பெரியார் உயராய்வு மையத்தின் சார்பில் பெரியார், அண்ணா நட்புலகம் குறித்த கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் வீ. ராஜகோபால் தலைமை வகித்தார். பெரியார் உயராய்வு மையத் தலைவர் இரா. தாமோதரன் அறிமுக உரையாற்றினார். கலைத் துறையில் பெரியாரும், அண்ணாவும் என்ற தலைப்பில் மு. இளமுருகன் பேசினார். நிகழ்ச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர் கலந்தாய்வு, குறைதீர் மைய இயக்குநர் பெ. கோவிந்தசாமி, ஆராய்ச்சி ஆலோசகர் வி. ராமையன், பேராசிரியை உமா, கல்லூரி நிர்வாக அலுவலர்கள் ஜி. ஆர்த்தி, எம். மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.