கும்பகோணத்தில் பூம்புகார் நிறுவனம் சார்பில் கிருஷ்ணா தரிசனக் கண்காட்சி செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கப்பட்டது.
கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு பூம்புகார் விற்பனை நிலைய உள் வளாகத்தில் இதற்கான கண்காட்சி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. ஆக. 20-ம் தேதி மாலை தொடங்கி வரும் 31-ம் தேதி வரை கண்காட்சி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து பூம்புகார் நிறுவனத்தின் உதவி மேலாளர் மைனாவதி கூறியது:
இக் கண்காட்சியில் பஞ்சலோகம், மண், பேப்பர் கூழ், பித்தளை, மார்பிள் பவுடர், அலாய் மெட்டல் போன்ற மூலப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட ஆழிலைகிருஷ்ணர், வெண்ணெய்த்தாழி கிருஷ்ணர், காளிங்கநர்த்தன கிருஷ்ணர், ராதாகிருஷ்ணர், ஊஞ்சல் கிருஷ்ணர் உள்ளிட்ட பல சிலைகளும், நூக்க மர பேனல்கள், எண்ணற்ற கலைநயமிக்க பரிசுப் பொருட்கள், உயர்தர பித்தளை விளக்குகள், தஞ்சை கலை தட்டுகள், பூஜைப் பொருட்கள், தஞ்சை ஓவியங்கள், நெட்டி மாடல்கள், மொராதாபாத் பித்தளை பரிசுப் பொருட்கள், ஐம்பொன் நகை வகைகள், தங்க முலாம் நகைகள், முத்து, பவள மாலைகள், ஸ்படிக மாலைகள், ருத்திராட்சம், நவரத்தின மாலைகளும் விற்பனைக்கு உள்ளன.
ரூ. 50 முதல் அதிகபட்சமாக ரூ. 50 ஆயிரம் வரையிலான பரிசு பொருட்கள் கண்காட்சிக்கும், விற்பனைக்கும் உள்ளன. இதில் 3 இஞ்ச் முதல் மூன்றடி வரை உயரம் உள்ள கிருஷ்ணர் சிலைகள் உள்ளன. கண்காட்சியின் விற்பனை இலக்கு ரூ. 1 லட்சம் என்றார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

