தஞ்சாவூர் அருகே தன் மீது தீ வைத்த கணவரை மனைவி கட்டிப் பிடித்ததில் பலத்தக் காயமடைந்த கணவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
தஞ்சாவூர் அருகேயுள்ள வீரசிங்கம்பேட்டை இந்திரா காலனியை சேர்ந்தவர் செல்வகுமார் (38). இவரது மனைவி மீனா (28). இருவருக்கும் இடையே குடும்பத் தகராறு இருந்து வந்ததாம்.
இதேபோல இருவருக்கும் இடையே அண்மையில் தகராறு ஏற்பட்டதாம். அப்போது, மீனா மீது செல்வக்குமார் மண்ணெண்ணையை ஊற்றித் தீ வைத்தாராம். மீனா மீது தீப்பற்றி எரிந்தபோது அவர் செல்வக்குமாரை கட்டிப் பிடித்தாராம். இதனால், செல்வகுமாரும் தீக்காயமடைந்தார்.
பலத்தக் காயமடைந்த இருவரும் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு செல்வகுமார் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மீனா தொடர்ந்து சிகிச்சை பெறுகிறார்.
இதுகுறித்து நடுக்காவிரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

