தஞ்சாவூர் மாவட்டம், பூதலூரை அடுத்துள்ள சித்திரக்குடியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி மாட்டுவண்டி,குதிரைவண்டி எல்லைப் பந்தயம் அண்மையில் நடைபெற்றது.
முன்னாள் மத்திய அமைச்சரும், தஞ்சாவூர் மாவட்ட திமுக செயலருமான எஸ்எஸ். பழநிமாணிக்கம் தலைமை வகித்தார். வழக்குரைஞர் எஸ்எஸ். ராஜ்குமார் முன்னிலை வகித்தார்.
பெரியமாடு பிரிவில் கடம்பன்குடி, காமாட்சி அம்மன் முதல் பரிசும், கூடநாணல் தமிழரசன் 2-ம் பரிசும், திருச்சி மாவட்டம், வேங்கூட்ர ஆறுமுகசாமி 3-ம் பரிசும் பெற்றனர்.
நடுமாடு பிரிவில், அம்மன்பேட்டை மகாராஜன் முதல் பரிசும், கூத்தூர் கருப்புசாமி 2-ம் பரிசும், திருச்சி அரசகுடி கருப்பண்ணன் 3-ம் பரிசும் பெற்றனர்.
பூஞ்சிட்டு மாடு பிரிவில் திருச்சி மருதூர் சுப்பிரமணியன் முதல் பரிசும், தஞ்சை ராயந்தூர் ஜெயராமன் 2-ம் பரிசும் பெற்றனர்.
நடுத்தரக் குதிரை பிரிவில் திருச்சி மாரீஸ் ராஜா முதல் பரிசும், தஞ்சை புனல்வாசல் நான் காந்தி 2-ம் பரசும், லால்குடி பர்வீன் 3-ம் பரிசும் பெற்றனர்.
விழாவில் முன்னாள் விவசாய அணி அமைப்பாளர் து. செல்வம், தஞ்சாவூர் திமுக ஒன்றியச் செயலர் டி. அருளானந்தசாமி, பூதலூர் ஒன்றியக் குழு உறுப்பினர் பூண்டி எஸ். வெங்கடேசன், பூதலூர் வித்யா மெட்ரிக் பள்ளித் தாளாளர் அ. பாண்டியன், சித்திரக்குடி கோ. கிள்ளிவளவன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சண். ராமநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஆர். உலகநாதன் வரவேற்றார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

