சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சித்திரக்குடியில் மாடு, குதிரைவண்டிப் பந்தயம்

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூரை அடுத்துள்ள சித்திரக்குடியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி

Updated On :22 ஆகஸ்ட் 2013, 6:26 pm

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூரை அடுத்துள்ள சித்திரக்குடியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி மாட்டுவண்டி,குதிரைவண்டி எல்லைப் பந்தயம் அண்மையில் நடைபெற்றது.

முன்னாள் மத்திய அமைச்சரும், தஞ்சாவூர் மாவட்ட திமுக செயலருமான எஸ்எஸ். பழநிமாணிக்கம் தலைமை வகித்தார். வழக்குரைஞர் எஸ்எஸ். ராஜ்குமார் முன்னிலை வகித்தார்.

பெரியமாடு பிரிவில் கடம்பன்குடி, காமாட்சி அம்மன் முதல் பரிசும், கூடநாணல் தமிழரசன் 2-ம் பரிசும், திருச்சி மாவட்டம், வேங்கூட்ர ஆறுமுகசாமி 3-ம் பரிசும் பெற்றனர்.

நடுமாடு பிரிவில், அம்மன்பேட்டை மகாராஜன் முதல் பரிசும், கூத்தூர் கருப்புசாமி 2-ம் பரிசும், திருச்சி அரசகுடி கருப்பண்ணன் 3-ம் பரிசும் பெற்றனர்.

பூஞ்சிட்டு மாடு பிரிவில் திருச்சி மருதூர் சுப்பிரமணியன் முதல் பரிசும், தஞ்சை ராயந்தூர் ஜெயராமன் 2-ம் பரிசும் பெற்றனர்.

நடுத்தரக் குதிரை பிரிவில் திருச்சி மாரீஸ் ராஜா முதல் பரிசும், தஞ்சை புனல்வாசல் நான் காந்தி 2-ம் பரசும், லால்குடி பர்வீன் 3-ம் பரிசும் பெற்றனர்.

விழாவில் முன்னாள் விவசாய அணி அமைப்பாளர் து. செல்வம், தஞ்சாவூர் திமுக ஒன்றியச் செயலர் டி. அருளானந்தசாமி, பூதலூர் ஒன்றியக் குழு உறுப்பினர் பூண்டி எஸ். வெங்கடேசன், பூதலூர் வித்யா மெட்ரிக் பள்ளித் தாளாளர் அ. பாண்டியன், சித்திரக்குடி கோ. கிள்ளிவளவன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சண். ராமநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஆர். உலகநாதன் வரவேற்றார்.