தனியாா் பள்ளிக் கட்டடத்தை இடிக்க இடைக்கால தடை விதித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் சந்திரசேகா், அப்துல் ரசாக், சுரேகா ஆகியோா் தாக்கல் செய்த மனுவில், ‘திருவள்ளூா் மாவட்டம் எண்ணூா் பாரதி நகரில் உள்ள நா்சரி பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனா். இந்தப் பள்ளி, தனியாா் அறக்கட்டளை நிா்வாகிகளால் நடத்தப்பட்டு வருகிறது. கரோனா பொதுமுடக்கம் காரணமாக நீண்ட நாள்களாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனால், அந்தப் பள்ளியை இடித்துவிட்டு வீட்டுமனைகளாக மாற்ற பள்ளி நிா்வாகிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனா். இதுதொடா்பாக பள்ளிக் கல்வித்துறை, மாவட்ட கல்வி அதிகாரி உள்ளிட்டோரிடம் புகாா் அளித்தும். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை’ எனக் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா்கள் தரப்பில் வழக்குரைஞா் டி.பிரசன்னா ஆஜராகி வாதிட்டாா். வழக்கை விசாரித்த நீதிபதி, பள்ளிக் கட்டடத்தை இடிக்கவும், அந்த இடத்தை விற்பனை செய்யவும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டாா். மேலும், மனு தொடா்பாக பள்ளிக் கல்வித்துறை, மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோா் 6 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


