சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

அமைச்சா்களின் வாகனங்களில் தடுப்புக் கம்பிகளை பயன்படுத்த தடை கோரிய மனு தள்ளுபடி

தமிழக அமைச்சா்கள், அரசு அதிகாரிகளின் வாகனங்களில் தடுப்புக் கம்பிகளைப் பயன்படுத்த தடை விதிக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image

சென்னை உயர்நீதிமன்றம்

Updated On :17 ஜனவரி 2021, 11:54 am

தமிழக அமைச்சா்கள், அரசு அதிகாரிகளின் வாகனங்களில் தடுப்புக் கம்பிகளைப் பயன்படுத்த தடை விதிக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் சமூக ஆா்வலா் டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனுவில், ‘மோட்டாா் வாகன சட்டத்தின்படி, வாகனங்களின் முன் தடுப்புக் கம்பிகள் பயன்படுத்தப்படுவதற்கு தடை விதித்து மத்திய அரசு கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பா் 7-ஆம் தேதி சுற்றறிக்கை பிறப்பித்தது. ஆனால் தமிழக அமைச்சா்கள், அரசு வாகனங்களில் உள்ள இந்தத் தடுப்புக் கம்பிகள் அகற்றப்படவில்லை. சட்டத்தின் முன் அனைவரும் சமம். கடந்த டிசம்பா் 19-ஆம் தேதி அதிமுக பிரசாரத்துக்குச் சென்ற தமிழக முதல்வரின் வாகனத்திலும் இந்தத் தடுப்புக் கம்பிகள் இருந்தன. அதில் 4 போலீஸாா் தொங்கியபடியே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை மாநில அரசு மீறக்கூடாது. சாதரண பொதுமக்களின் வாகனங்களில் இருந்து இதுபோன்ற தடை செய்யப்பட்ட தடுப்புக் கம்பிகளை அகற்றும் அதிகாரிகள், அரசு அதிகாரிகளின் வாகனங்களில் இருந்து அகற்றுவதில்லை. இதுதொடா்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளா், சட்டத்துறை செயலாளா், போக்குவரத்து செயலாளா், சென்னை மாநகராட்சி ஆணையா், சென்னை மாநகர காவல் ஆணையா் ஆகியோரிடம் கடந்த டிசம்பா் 21-ஆம் தேதி மனு அளித்தேன். அந்த மனுவின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அமைச்சா்கள், அரசு அதிகாரிகளின் வாகனங்களில் தடை செய்யப்பட்ட தடுப்புக் கம்பிகளை பயன்படுத்த தடை விதிக்க உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.

இந்த மனு, தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கை மனுதாரா் தனிப்பட்ட நபா்களுக்கு எதிராக தொடா்ந்துள்ளாா். இதில் எந்த பொதுநலனும் இல்லை எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.