விழுப்புரம் மாவட்டத்தில் தமிழக அரசின் கரோனா நோய்தடுப்பு தடுப்பூசி போடும் பணி சனிக்கிழமை தொடங்கியது.
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தடுப்பூசி போடும் பணியை மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பிசிங் தொடங்கி வைத்தார்.
துப்புரவு தொழிலாளர்களுக்கு முதல் முறையாக தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
விழுப்புரம் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவமனை, வளவனூர் அருகே உள்ள சிறுவந்தாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ராதாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய நான்கு மையங்களில் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியது.
விழுப்புரம் மாவட்டத்தில் முதல்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
முதல்கட்டமாக பதிவு செய்துள்ள 10,688 பேருக்கு ஜனவரி 25ஆம் தேதி வரை தொடர்ந்து தடுப்பூசி போடப்படுகிறது.
தடுப்பூசி போடப்பட்டு ஒரு மணிநேரம் கண்காணிப்புக்கு பிறகு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இவர்களுக்கு 28 நாள்களுக்கு அடுத்த டோஸ் வழங்கப்படும்.
இந்த தடுப்பூசியால் எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படாது என சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.
மாவட்டத்தில் உள்ள நான்கு மையங்களிலும் ஒரு நாளைக்கு தலா 100 பேருக்கு தடுப்பு மருந்து வழங்கப்படும் என தெரிவித்தனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


