திமுகவைக் கண்டித்து தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் அதிமுக சார்பில் சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக முதல்வரையும், பெண்களையும் தரக்குறைவாக விமர்சித்து வரும் திமுக இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, கடையநல்லூர் நகரச் செயலர் எம்.கே.முருகன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலர்கள் செல்லப்பன், முத்து பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தென்காசி வடக்கு மாவட்டச் செயலர் கிருஷ்ணமுரளி கண்டன உரையாற்றினார். முன்னாள் நகரச் செயலர் கிட்டுராஜா, நகர பொருளாளர் அழகர்சாமி, வார்டு செயலர் பழனிச்சாமி, எம்ஜிஆர் மன்ற இணைச் செயலர் முத்துகிருஷ்ணன், மாவட்ட மாணவரணி துணை செயலர் கருப்பையாதாஸ், நகர இளைஞரணி செயலர் ராஜேந்திர பிரசாத், ராசி சரவணன், ஜெயலலிதா பேரவை செயலர் முத்தையா பாண்டியன், சவுதி அரேபியா ஜெயலலிதா பேரவை செயலர் மைதின், சொக்கம்பட்டி குட்டிராஜா உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


